பொதுவாக அசைவ உணவுகளில் மனிதனுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவுகளில் இன்று ஆட்டு இறைச்சி. இதன் தலை, இதயம், நுரையீரல், மூளை என்று அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவப் பயன்களை அதிகமாக தருகிறது.
ஆட்டிறைச்சி சாப்பிடும் போது அதன் சதைகளை மட்டும் சாப்பிடாமல் அதன் அணைத்து உறுப்புகளையும் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நமது இதயத்தில் ஏற்படும் வலி நாம் ஆடு இறைச்சி சாப்பிடுவதால் சரியாகிறது. மேலும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் நமது குடலில் உள்ள கழிவுகள் நீங்கி மேலும் நமது தலைப்பகுதில் உள்ள எலும்புகள் வலுவாகிறது.
ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் வலுவாகிறது. நமது பார்வை கோளாறுகள் சரியாகி, கூர்மையான பார்வை பெற ஆட்டிறைச்சியை வாரமொருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது.
ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.