Pen Bird
Product details
படித்தவர்கள் நியாயமாக ஓட்டுப் போட்டு விடுவார்கள்; படிக்காதவர்கள் நியாயமில்லாமல் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்பதெல்லாம் கிடையாது. அப்படிச் சொல்ல முடியாது. ஏழைகள் தனக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்று நினைத்தால் ஆட்சியை மாற்றி விடுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் வேலை வாய்ப்பு, தொழில் வசதிகள் எல்லாவற்றையும் பார்க்கிறாரர்கள்.
*
நாங்குனேரி சப்ஜெயிலில் ஆறு மாதம் வைத்திருந்தார்கள். இரவு பகலாக லாக்அப். காலையில் காலைக் கடனுக்காக மட்டும் திறந்துவிடுவார்கள். மற்ற நேரமெல்லாம் மூத்திரச் சட்டியுடன் லாக்கப்புக்குள்ளேயே இருக்க வேண்டும். பிறகு கொக்கிரகுளம் சப்ஜெயில். அதன் பிறகு அங்கிருந்து மதுரை ஜெயில், அங்கிருந்து திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். வரும்போது பல சமயம் போலீசாருடன் தகராறு வரும்.
நான் மதுரை சிறையில் இருந்த ஐந்து வருஷங்களுக்குள் 22 தூக்குகளைப் பார்த்திருக்கிறேன். தூக்குப் போடுகிற தினத்திற்கு முன்பு பலர் அழுதிருக்கிறார்கள். அரசைக் குறைகூறுவார்கள். தான் தப்பு பண்ணிவிட்டதாகச் சொல்லிக் கலங்குவார்கள்...
Similar products