Pen Bird
Product details
தமிழில் இராமாயணத்தைப் படைத்த கம்பனின் பெயருடன் சேர்த்தே அது, கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது. கம்பனையும் இராமாயணத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டு பெயர்களையும் ஒன்றாக இணைத்தே நாம் போற்றுகிறோம்.
இந்த உலகத்தில் எல்லா வகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அரச பதவியே கிடைத்திருந்தாலும் தேவர் உலகத்தில் உள்ள கற்பகச் சோலையின் நிழலில் இருந்தாலும் இராமனின் கதையைக் கற்றோரைப் போல் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருக்க இயலாது என்று கம்பன் கவிப் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
கம்பராமாயணம் மட்டுமன்றி சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை உள்ளிட்ட நூல்கள் இவர் இயற்றிய நூல்கள் என்று அறியப்படுகின்றன.
கம்பனின் சொல்லாட்சி, இலக்கிய நுட்பம், தமிழ்ப் பற்றும் உயர்ந்த சிந்தனைகளும் வெளிப்படும் படைப்புலகை ஆழமாக அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு வாசகருக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
Similar products