Pen Bird
Product details
வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் மழலையையும், பெற்றோர்களாக முதியவர்களையும் காணும் இக்காலக் கட்டத்தில்தான் வாழ்க்கை தன் புதிர்களை அவிழ்த்துவிடும். இரண்டு தலைமுறைக்கும் இடையில் இடைவெளிதான் எவ்வளவு? இதைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள்.
பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும், பெற்றோர்கள் தங்கள் முதுமைக் காலத்தில் கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் இப்புத்தகம் ஆழமான வழிகாட்டலை வழங்குகிறது.
Similar products