Pen Bird
Product details
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத தனித்தன்மையாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சரிபாதியாக வாழ்கிறார்கள். இப்படிச் சரிபாதியாக வாழுகிற மக்களில் கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு காலத்தில் மதம் மாறியவர்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் மதம் மாறியது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம், அல்லது முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாவட்டமாக விளங்கிய காலத்தில் 1956க்குப் பிறகு நிகழ்ந்த மதமாற்றம் பற்றியும் அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்பில் எழுந்த சிக்கல்கள் பற்றியும் உருவான எண்ணத்தின் வெளிப்பாடே ‘போகிற வழி’ என்னும் இந்த நாவல்.
*
‘எங்கேயோ இருந்து இங்கே வந்து தங்கள் மதத்தைப் பரப்பிய இவர்களால் எப்படி இவ்வளவு உயரமான கோயிலை எழுப்ப முடிந்தது?’
*
மதம் எப்படி மறைமுகமாக நம் வாழ்வியல் முறையையும் நமக்குள்ளே பிரிவினையையும் ஏற்படுத்தியது என்பதை மறைமுகமாகப் பதிவு செய்யும் வரலாற்று ஆவணம் இது.
Similar products